மத்திய அரசின் அர்ஜூனா விருதைப் பெற உள்ள தமிழக மேசைப் பந்து விளையாட்டு வீரர் ஜி.சத்தியனுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜி.சத்தியனுக்கு முதல்வர் அனுப்பிய வாழ்த்துக் கடித விவரம்:
சர்வதேச அளவில் மேசைப் பந்து விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு, பல பதக்கங்களை வென்று இந்திய நாட்டுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ள தங்களுக்கு மத்திய அரசு அர்ஜூனா விருது வழங்கி கௌரவிக்க உள்ளதற்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் தருணத்தில் தாங்கள் மேசைப்பந்து போட்டிகளில் மேலும் பல வெற்றிகளைக் குவித்து சாதனை சிகரங்களைத் தொட எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.