கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
10 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த தினகரனுக்கு மக்களை பற்றி ஒன்றும் தெரியாது. மக்களை பற்றி படிக்கும் பாடத்தில் வெற்றிபெற்ற பின்பு அரசியலை தினகரன் எதிர்கொள்ளட்டும்.
பொது இடங்களில் எப்படி பேச வேண்டும் என தெரியாத எம்எல்ஏ கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பாஜக மிகச்சிறந்த அரசாக மத்தியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நாட்டை ஒரு ஆளுமைக்கு கீழ் கொண்டுவர வேண்டும் என்ற லட்சியத்தோடு மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.
மக்கள் நலன்களை பெற்று தர மத்திய அரசுடன் அதிமுக நல்லுறவுடன் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.