தமிழ்நாடு
சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரள மாணவர் தற்கொலை
சென்னை ஐஐடியில் 5ம் ஆண்டு மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை: சென்னை ஐஐடியில் 5ம் ஆண்டு மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
ஐஐடியில் 5ம் ஆண்டு படித்து வந்த கேரளாவைச் சேர்ந்த சாஹில் கோர்மத்(23) என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஐஐடி மாணவர்கள் தங்கும் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கோர்மத்தின் உடல் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
தற்கொலைக்கான காரணம் குறித்து கோட்டூர்புரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.