புழல் சிறையில் தொடரும் சோதனை: மேலும் 4 செல்லிடப்பேசிகள் பறிமுதல்

புழல் மத்திய சிறையில் தொடர்ந்து 4 ஆவது நாளாக நடைபெற்ற அதிரடி சோதனையில் மேலும் 4 செல்லிடப்பேசிகள், சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை புழல்


புழல் மத்திய சிறையில் தொடர்ந்து 4 ஆவது நாளாக நடைபெற்ற அதிரடி சோதனையில் மேலும் 4 செல்லிடப்பேசிகள், சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகள் சிலர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது குறித்து தினமணியில் வெளியான செய்தி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 
இதைத் தொடர்ந்து நடைபெற்ற அதிரடி சோதனைக்குப் பின், பல கைதிகளும், சிறை வார்டன்களும் வெவ்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில், 4-ஆம் நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற சோதனையில் 20க்கும் மேற்பட்ட சிறை அதிகாரிகள் ஈடுபட்டனர். 
இதில், ஆயுள் தண்டனைக் கைதிகளான ஐயப்பன்(47), குலசேகரன்(49) ஆகிய 2 பேரிடம் இருந்து 4 செல்லிடப்பேசிகளும், பேட்டரிகளும், சிம்கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து, புழல் காவல் ஆய்வாளர் நடராஜ் வழக்குப் பதிவு செய்து இவர்களுக்கு செல்லிடப்பேசிகள் எப்படி வந்தன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com