தடா- சூலூர்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள புனரமைப்புப் பணி நடக்கவுள்ளதால், செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் அக்டோபர் 7-ஆம் தேதி வரை அதிகாலை 1.05 மணி முதல் காலை 6 மணி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.
செப்.24 முதல் அக்.7 வரை சேவையில் மாற்றப்படும் ரயில்கள்:
முழுமையாக ரத்து: கும்மிடிப்பூண்டி-சூலூர்பேட்டைக்கு அதிகாலை 4.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
பகுதி ரத்து: சூலூர்பேட்டை- மூர்மார்க்கெட்டுக்கு அதிகாலை 5.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சூலூர்பேட்டை-கும்மிடிப்பூண்டி இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் கும்மிடிப்பூண்டியில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு வரை மட்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.