பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் தண்ணீர் கொட்டுவதால், செவ்வாய்க்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
கும்பக்கரை அருவியில் 10 நாள்களுக்கு முன் நீர்வரத்தின்றி இருந்தது. இதனால், அருவிப் பகுதிக்குச் செல்ல வனத் துறையினர் தடை விதித்ததால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இந்நிலையில், கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கொடைக்கானல் மலைப் பகுதியில் பரவலாக மழை பெய்ததால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால், செவ்வாய்க்கிழமை முதல் அருவியில் சீரான நீர்வரத்து இருந்ததால், அருவிக்குச் செல்ல வனத் துறையினர் அனுமதியளித்தனர்.