தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெரியார் சிலை அவமதிப்புக்கு ஹெச்.ராஜாவே காரணம்: வைகோ 

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெரியார் சிலை அவமதிப்புக்கு ஹெச்.ராஜாவே காரணம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெரியார் சிலை அவமதிப்புக்கு ஹெச்.ராஜாவே காரணம்: வைகோ 

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெரியார் சிலை அவமதிப்புக்கு ஹெச்.ராஜாவே காரணம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

தமிழ் ஈழம் அமைக்க வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து மறைந்த திலீபனின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை எழும்பூரில் மதிமுக தலைமையகத்தில் திலீபனின் உருவப்படத்திற்கு அதன் பொதுச்செயலாளர் வைகோ மரியாதை செலுத்தினார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 
நாட்டில் சிந்தனையாளர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. மதச்சார்பின்மையை சிதைத்து, நல்லிணக்கத்தை குலைக்க சதி நடக்கிறது. இந்துத்வா சக்திகளின் பின்னணியில் மத்திய ஆளும் அரசு செயல்பட்டு வருகிறது. 

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெரியார் சிலை அவமதிப்புக்கு ஹெச்.ராஜாவே காரணம். காவல்துறை பாதுகாப்போடு ஹெச்.ராஜா, ஆளுநரை சந்திப்பது என்ன வகையில் நியாயம்?. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com