பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அங்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினர் சனிக்கிழமை முதல் தடை விதித்துள்ளனர்.
கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த வியாழக்கிழமை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கும்பக்கரை அருவிக்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் நீர்வரத்து அதிகரித்தது. அதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டது.
சனிக்கிழமை காலை முதல் சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு செல்ல வனத் துறையினர் தடை விதித்தனர்.
சீரான நீர்வரத்து ஏற்பட்ட பிறகே சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு செல்ல அனுமதிக்கப்படுவர் என வனத்துறையினர் தெரிவித்தனர்.