சென்னை: விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர்கள் வெள்ளியன்று மனுத்தாக்கல் செய்வார்கள் என்று தகவல் வெளியாகியுள்ள்ளது.
விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, பாமக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிடுகிறது.
தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுக்கு 19 தொகுதிகளை ஒதுக்கியது போக அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் கடந்த ஞாயிறு அன்று வெளியானது.
இந்நிலையில் விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர்கள் வெள்ளியன்று மனுத்தாக்கல் செய்வார்கள் என்று தகவல் வெளியாகியுள்ள்ளது.
அதேபோல் திமுக வேட்பாளர்கள் வரும் 25-ஆம் தேதி மனுதாக்கல் செய்வார்கள் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல் தெரிவிக்கிறது.