கொடைக்கானலில் நாய்கள் கண்காட்சி

கொடைக்கானலில் கோடை விழாவையொட்டி கால்நடைத் துறை சார்பில் புதன்கிழமை நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.
கொடைக்கானலில் நாய்கள் கண்காட்சி

கொடைக்கானலில் கோடை விழாவையொட்டி கால்நடைத் துறை சார்பில் புதன்கிழமை நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.
இங்குள்ள பிரையண்ட் பூங்காவில் நடைபெற்ற இந்த நாய்கள் கண்காட்சியில் பொமரேனியன், அல்சேஷன், புல்டாக், ஜெர்மன் ஷெப்பர்டு, லாப்ரடார், டாபர்மென் போன்ற 10-க்கும் மேற்பட்ட வகைகளில் கொடைக்கானல், சென்னை போன்ற இடங்களிலிருந்து சுமார் 50 நாய்கள் பங்கேற்றன.
அப்போது 5 பிரிவுகளின் கீழ் நடைபெற்ற போட்டிகளில் நாய்களின் உடலமைப்பு, சுத்தம், கீழ்படிதல் உள்ளிட்டவைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் கொடைக்கானலைச் சேர்ந்த ஜெர்மன் ஷெப்பர்டு நாய் முதல் பரிசை பெற்றது.
மேலும் சென்னையைச் சேர்ந்த டாபர்மென் நாய்க்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில் 'ஏ' பிரிவில் வெற்றி பெற்ற கொடைக்கானலைச் சேர்ந்த நாயின் உரிமையாளர் ராடன் சுதர்சனுக்கு முதல் பரிசாக கோப்பை மற்றும் சான்றிதழை மாவட்ட வன அலுவலர் முருகன் வழங்கினார்.
'பி' பிரிவில் முதல் பரிசை ஜெர்மன் ஷெப்பர்டு நாயின் உரிமையாளர் ஜான் பீட்டருக்கும், அதே பிரிவில் சுதன் என்பவரின் நாய்க்கு இரண்டாம் பரிசும் வழங்கப்பட்டன.
மேலும் 'சி' பிரிவில் ஜெர்மன் ஷெப்பர்டு இனத்தைச் சேர்ந்த நாயின் உரிமையாளர் சக்திவேலுக்கு முதல் பரிசும், நாதன் என்பவரின் நாய்க்கு இரண்டாம் பரிசும் வழங்கப்பட்டது. இதேப் போல 5 பிரிவுகளில் வெற்றி பெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் கால்நடைத் துறை துணை இயக்குநர் ஜெபராஜ், சுற்றுலா அலுவலர் உமாதேவி, டாக்டர் ஹக்கீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com