எழுத்தாளர் பிரபஞ்சனின் தந்தை எழுதப் படிக்கத் தெரியாதவர் ஆனாலும், தன் மகனை ஏழாம் வகுப்பு படிக்கும் போதே பள்ளிவிட்டவுடன் நூலகம் செல்லச் சொல்லி வழிகாட்டியவர். மேலும் தன் மகனின் பிறந்தநாளின்போது தனக்குத் தெரிந்த, நூல்களைப் பற்றி அறிந்தவர்களிடம் கேட்டு நல்லநூல்களைப் பரிசளிப்பாராம். நல்ல தந்தையைப் பெற்ற பிரபஞ்சன் பாக்கியசாலி.