மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சத்யா நாதெள்ளா ஒரு கிரிக்கெட் ரசிகர். இப்போதும் இந்திய கிரிக்கெட் போட்டிகளைக் கூர்ந்து கவனித்து வருபவர்.
அவருக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என்பதற்கு அவர் அளித்த பதில்:
"எம்.எல்.ஜெய்சிம்ஹா. என்னைப் பொருத்தவரை அவர் சச்சின் டெண்டுல்கரை விட ஒரு படி மேல்!'' என்றார்.
இன்று எம்.எல்.ஜெய்சிம்ஹா உயிருடன் இல்லை. அவருடைய மகன் வித்யூத் ஐதராபாத் கிரிக்கெட் அகாதெமியைத் துவக்கி நடத்தி வருகிறார்.
-ராஜிராதா