நடிகர் சிவாஜி கணேசன் "கட்டபொம்மன்' நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, நாடகம் நடைபெறுவதற்கு முதல் நாளன்றே படப்பிடிப்புகளில் இருந்து விலகி, நாடகக் கொட்டகைக்கு வந்து சக நடிகர்களுடன் ஒத்திகை பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்.
ஒருநாள் நாடக அரங்கில் அவர் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தபோது, சபா நிர்வாகி அவரைச் சந்திக்க வந்தார். ""நீங்கள் தொடர்ந்து இந்த நாடகத்தில் நடித்து வருகிறீர்கள். படங்களிலும் நடித்து நடிகர் திலகம் என்ற பட்டமும் பெற்றிருக்கிறீர்கள், உங்களுக்குக் கூடவா ஒத்திகை தேவை?'' என்று கேட்டார்.
"அந்தப் பட்டம் எனக்கு நிலைத்து நிற்க வேண்டும் அல்லவா? அதற்காகத்தான்!'' என்றாராம் சிவாஜி.
-ஆர்.அஜிதா