கடுமையான கோடை காலம் என்பதால் ஆசிரியர் ஒருவர் கடும் வியர்வையைத் தாங்க முடியாமல் சட்டையைக் கழற்றிவிட்டு, திறந்த மார்புடன் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மாணவன், ""ஸ்கூல் இன்ஸ்பெக்டர் வர்றார் சார்'' என்றான்.
ஆசிரியர் திரும்பிப் பார்த்தார். பையன் சொன்ன மாதிரியே இன்ஸ்பெக்டர் வந்து கொண்டிருந்தார். கொஞ்சமும் பதட்டமடையாமல், மாணவர்களுக்கு தனது மெலிந்த மார்பைக் காட்டி நுரையீரல், இதயம் எங்குள்ளது என்று விளக்க ஆரம்பித்துவிட்டார் ஆசிரியர்.
சு.ஆறுமுகம், கழுகுமலை.