"நில்... கவனி... கேள் என்ற மூன்றுக்குள் எல்லா விஷயங்களையும் அடக்க முடியும்'' என்றார் ஒரு பெரியவர்.
உடனே அருகிலிருக்கும் இளைஞன் ஒருவன் நான் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன். இதை எப்படி உங்கள் அறிவுரைக்குப் பொருத்துவீர்கள்?'' என்று கேட்டான்.
"அந்தப் பெண்ணைக் காணும்போது நீ நிற்கிறாய். அவள் உன்னைப் பார்க்கிறாளா? என்று கவனிக்கிறாய். இருவருக்கும் திருமணமான பிறகு, ஆயுள் முழுவதும் அவள் சொல்வதை நீ கேட்கிறாய்'' என்றார் அந்தப் பெரியவர்.
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.