மனைவி, மாமியாரின் நச்சரிப்பு தாங்காமல் அவர்களையும் கூட்டிக் கொண்டு வேட்டைக்குக் கிளம்பினான் ஒரு வேட்டைக்காரன். இரவு வந்ததும் கூடாரம் போட்டு தங்கினார்கள். நடுராத்திரியில் கண் விழித்த வேட்டைக்காரனின் மனைவி, தன் அம்மாவைக் காணாமல் திடுக்கிட்டாள். பதறிப் போய் கணவனை எழுப்பினாள். இருவரும் காட்டுக்குள் தேடினார்கள்.
ஒரு புதர் அருகே சிங்கத்துக்கு எதிரே மாமியார் நின்றிருந்தார்.
"ஐயையோ.... இப்ப என்னாங்க பண்றது?''
என நடுக்கத்துடன் கேட்டாள் மனைவி.
வேட்டைக்காரன் சீரியஸôக முகத்தை வைத்துக் கொண்டு, "பயப்படாதே... சிங்கம் காட்டுக்கே ராஜா. எப்படியாவது தப்பிச்சிடும்''
சி.ரகுபதி, போளூர்.