• உலகத்தில் எந்தத் தண்ணீரை எடுத்து பாட்டிலில் இரண்டு மாதம் அடைத்து வைத்தாலும் அதிலே புழு வந்துவிடும். கங்கைத் தண்ணீரை ஆண்டுக்கணக்கில் அடைத்து வைத்தாலும் புழு வராது அதுதான் கங்கை!
"பிருந்தாவனம்' என்ற நூலில் கவியரசு கண்ணதாசன்.
எம்.அசோக்ராஜா,
அரவக்குறிச்சிப்பட்டி.
• பசிக்கும் பொழுது சாப்பிடாவிட்டால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் போய்விடும். அப்பொழுது இரத்தமானது உடலிலுள்ள புரதத்தை உபயோகித்துக் கொள்ளத் தொடங்கும். இந்நிலை தொடருமேயானால், உடல் இளைத்துவிடும்.
எல்.நஞ்சன்,
முக்கிமலை