முருகேசனுக்கு கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தலில் தலைவருக்குப் போட்டியிடும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது அவனைத் தேடி ஓர் இளம் பெண்ணும் ஒரு தாத்தாவும் வந்தனர்.
பெரியவர் சொன்னார்: "முருகேசா ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா... உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நிச்சயமாயிருக்கு... என் பொண்ணை சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கோ'' என்றார்.
"யோவ் பெரிசு இப்ப என் நிலைமையே வேற... உன் பொண்ணை எல்லாம் என்னால கல்யாணம் செஞ்சுக்க முடியாது'' என திட்டவட்டமாக மறுத்துவிட்டான் முருகேசன்.
தேர்தல் நடந்தது. முடிவும் வந்தது. முருகேசன் வெறும் இரண்டு ஓட்டு விஷயத்தில் தோற்றுவிட்டான்.
எஸ்.அருள்மொழி சசிகுமார்,
கம்பைநல்லூர்.