அமெரிக்கா போவதற்குச் சில நாட்களுக்கு முன்பு, இளையராஜாவின் இசையமைப்பில் நான்கு பாடல்கள் எழுதித் தருவதாக ஒப்புக் கொண்டிருந்தார் கவிஞர் கண்ணதாசன்.
பிரசாத் ஸ்டியோவில் அவர் மூன்று பாடல்கள் எழுதி முடித்த பிறகு கிளம்பிவிட்டார். காரில் திரும்பிக் கொண்டிருந்த அவர், "இளையராஜா கொடுத்து வச்சவர் ஏன்னா, அமெரிக்கா போய்த் திரும்பினப்புறம் நான் பாட்டு எழுத மாட்டேன்'' என்று கூறினார். கவிஞர் அமெரிக்காவிலிருந்து திரும்பி வரவும் இல்லை, கவிதை எழுதித் தரவும் இல்லை.
கவிஞர் கண்ணதாசனுக்கு நடைபெற்ற அஞ்சலியில் அவரது செயலாளர், இராம. கண்ணப்பன்.
சி.ரகுபதி, போளூர்.