மைக்ரோ கதை

பேருந்தில் தொங்கும் மீசையும் பரட்டைத் தலையுமாயிருந்த மனிதன் மீது சந்தேகம் எழ,  சற்று நகர்ந்து சபாரி உடையணிந்த
மைக்ரோ கதை

பேருந்தில் தொங்கும் மீசையும் பரட்டைத் தலையுமாயிருந்த மனிதன் மீது சந்தேகம் எழ,  சற்று நகர்ந்து சபாரி உடையணிந்த ஒருவரின் பக்கத்தில் நின்று
கொண்டான் ரகு. 
சிறிது நேரத்தில், பேண்ட் பையில்  கைவிட்ட ரகு, " என் பர்ஸைக் காணோம்''  என்று அலறினான். 
அருகிலிருந்த சபாரி உடை மனிதன் நழுவப் பார்க்க, பரட்டைத் தலையாக இருந்தவன்  சபாரி உடையணிந்த மனிதனை எட்டிப் பிடித்து, கன்னத்தில் ஓர்
அறைவிட்டான்.
"எடுய்யா பர்சை...''
பர்சைப் பிடுங்கி ரகு கையில் ஒப்படைத்தவன், "உஷாரா இரு  சார்...'' என்றான்.
விஜயலட்சுமி, ஈரோடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com