பேருந்தில் தொங்கும் மீசையும் பரட்டைத் தலையுமாயிருந்த மனிதன் மீது சந்தேகம் எழ, சற்று நகர்ந்து சபாரி உடையணிந்த ஒருவரின் பக்கத்தில் நின்று
கொண்டான் ரகு.
சிறிது நேரத்தில், பேண்ட் பையில் கைவிட்ட ரகு, " என் பர்ஸைக் காணோம்'' என்று அலறினான்.
அருகிலிருந்த சபாரி உடை மனிதன் நழுவப் பார்க்க, பரட்டைத் தலையாக இருந்தவன் சபாரி உடையணிந்த மனிதனை எட்டிப் பிடித்து, கன்னத்தில் ஓர்
அறைவிட்டான்.
"எடுய்யா பர்சை...''
பர்சைப் பிடுங்கி ரகு கையில் ஒப்படைத்தவன், "உஷாரா இரு சார்...'' என்றான்.
விஜயலட்சுமி, ஈரோடு.