* மாம்பழம் அதிகம் சாப்பிட்டு அஜீரணம் என்றால் பால் சாப்பிட வேண்டும்.
* நெய் சாப்பிட்டு அஜீரணம் என்றால் எலுமிச்சைச் சாறு பருக வேண்டும்.
* கேக் சாப்பிட்டு அஜீரணம் என்றால் வெந்நீர் அருந்த வேண்டும்.
* பால் சாப்பிட்டு அஜீரணம் என்றால் வாழைப்பழம் சாப்பிட வேண்டும்.
* தேங்காயால் அஜீரணம் என்றால் அரிசியை சிறிது மென்று தின்றால் சரியாகும்.
* பருப்பினால் அஜீரணம் என்றால் சிறிது சர்க்கரை சாப்பிட வேண்டும்.
* பப்பாளிப்பழம் சாப்பிட்டதால் அஜீரணம் என்றால் தாராளமாக தண்ணீர் குடியுங்கள். குணமாகும்.
- ராஜி ராதா