சிரி... சிரி... சிரி... சிரி...

சிரி... சிரி... சிரி... சிரி...

வந்தவர்: சார்... எங்க வீட்டு வால் கிளாக்கை காணலை.
போலீஸ்: இதுக்கு போய் ஏன் ரொம்ப வருத்தப்படுறீங்க?
வந்தவர்: வாலோட காணாமப் போயிடுச்சு சார்.


""எங்க வீட்ல கேபிள் டிவியை கட் பண்ணிட போறேன்''
""ஏன் பசங்க படிக்கலையா?''
""இல்லை... என் மனைவி வீட்டுல சமைக்காம சீரியல் பார்த்துனே இருக்கா''


""உங்க பையனுக்கு எங்க நீச்சல் சொல்லித்தர்றீங்க?''
""தண்ணீலதான்''.


""டாக்டர்... ஞாபகமறதி வியாதிக்கு நீங்க கொடுத்த மாத்திரையைச் சாப்பிட்டா ஒரே தூக்கமா வருது''
""ஸôரி... நான் ஞாபகமறதியா தூக்க மாத்திரையைக் கொடுத்துட்டேன்''

வி.சாரதி டேச்சு, சென்னை-5.

""நான் அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி "பிச்சை'ன்னு ஒரு படம் எடுத்தேன்''
""இப்ப என்ன செய்றீங்க?''
""அதையே மறுபடியும் ரோட்டுல எடுத்துட்டுருக்கேன்''


""எங்கப்பா கல்யாணத்துக்கு முன்னாடி விட்டில் பூச்சியா பறந்துட்டு இருந்தாராம்''
""இப்ப?''
""வீட்டில் பூச்சியாயிருக்கார்''

லட்சுமி ஆவுடைநாயகம், சென்னை-91.

""எங்கப்பா கல்யாணத்துக்கு முன்னாடி விட்டில் பூச்சியா பறந்துட்டு இருந்தாராம்''
""இப்ப?''
""வீட்டில் பூச்சியாயிருக்கார்''

லட்சுமி ஆவுடைநாயகம், சென்னை-91.

""சிங்கப்பூர் சுத்தி பார்த்தையாடா? எப்படி இருக்கு?''
""எல்லாம் நம் ஊர் சுத்தி மாதிரி இரும்புலதான் இருக்கு''

அ.காயத்திரி தேவி, சென்னை-19.

""காஞ்சிபுரத்தில இருந்து பொண்ணைக் கட்டிக்கிட்டு வந்தது தப்பா போச்சு''
""ஏம்ப்பா''
""எதுக்கெடுத்தாலும் "பட்டுபட்டு'ன்னு பேசுறா''
 

தீ.அசோகன், சென்னை-19.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com