ஓர் ஊரில் ரவி என்ற இளைஞன் இருந்தான். அவனை எப்படி எரிச்சலூட்டினாலும் கோபமேபடமாட்டான். அவனைப் பார்க்க வந்த முரளி, "எனக்கு எதுக்கெடுத்தாலும் கோபம் வந்துடுது. கோபத்தை அடக்கவே முடியவில்லை. நீ எப்படி கோபப்படாமல் இருக்குற?'' என்று கேட்டான்.
அதற்கு ரவி, " நான் சின்னப் பையனா இருக்குறப்ப அடிக்கடி கோபப்படுவேன். அப்ப எங்க அம்மா சொன்ன அறிவுரை ஒண்ணுதான் என்னைக் கோபப்படாமல் தடுத்தது'' என்றான்.
"அப்படி என்ன சொன்னாங்க உங்க அம்மா?'' என்று ஆவலுடன் கேட்டான் முரளி.
ரவி சொன்னான்: "யாராவது உன்னைக் கோபப்படுத்தினா நீ அவங்க கிட்ட தோற்றதா அர்த்தம். அவங்க உன்னை எப்படி கோபமூட்டினாலும் நீ கோபப்படலைன்னா நீ ஜெயித்ததா அர்த்தம்'' ன்னு எங்க அம்மா சொன்னாங்க. நான் இப்ப எல்லாத்தையும் ஜெயித்துக் கிட்டிருக்கேன்.
அ.ராஜா ரஹ்மான், கம்பம்.