வீட்டிலிருந்த தொலைபேசியின் எண்களைக் கோபத்துடன் சுழற்றினார் வெங்கடேசன். எதிர்முனையில் இருந்தவருடன் மிக கோபமாய் பேசினார்.
"ஐம்பதாயிரம் கடன் வாங்கி எவ்வளவு நாள் ஆச்சு. எத்தனை தடவை கேட்டாச்சு. இன்னும் இரண்டு நாள் தவணை தர்றேன். அதற்குள் பாக்கித் தொகையைக் கொடுக்காவிட்டால் நடப்பதே வேறு. என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது. ஆள் வைத்து அடிப்பேன். ரோட்டில் சட்டையைப் பிடிச்சு இழுத்து மானத்தை வாங்குவேன். மரியாதையா ரெண்டு நாள்ல பணத்தைக் கொடுக்கப் பாரு'' என்று கத்திப் பேசினார்.
எதிர்முனையில் பதில் குரல் கேட்டது:
"ராங் நம்பர்''
இரா.சிவானந்தம், கோவில்பட்டி.