கார்கள் தொங்கும் தோட்டம் 

கார்கள் தொங்கும் தோட்டம் 

கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "குலேபகாவலி'. பிரபு தேவா, ஹன்சிகா, ரேவதி, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான்

கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "குலேபகாவலி'. பிரபு தேவா, ஹன்சிகா, ரேவதி, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், முனிஸ்காந்த், நான் கடவுள் ராஜேந்திரன், சத்யன், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் எஸ்.கல்யாண். படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் முடிவடைந்துள்ள நிலையில்,, படத்தின் பாடல் காட்சி ஒன்று இயற்கை எழில் சார்ந்த பின்னணியில் உருவாக இருந்தது.  இதில் மாற்றம் ஏற்பட்டு,  இயற்கை காட்சிகளை அரங்குகள் அமைத்தே உருவாக்க திட்டமிட்டனர். இதில் ஓர் அங்கமாக  தொங்கும் தோட்டமான பாபிலோன் தோட்டத்தை போல வடிவமைக்க திட்டம் தீட்டினார். அதில் புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என்று கலை இயக்குனர் கதிரிடம் ஆலோசித்து,   ஏராளமான கார்கள் தொங்கும் தோட்டம் அமைக்கப்பட்டது.  கலை இயக்குநர் கதிர் இதனை பிரம்மாண்டமான முறையில் உருவாக்கியிருந்தார். இதற்காக சென்னைக்கு அருகாமையில் பத்து ஏக்கர் நிலத்தில் அரங்குகள் அமைக்கப்பட்டன. இந்தப் பணியில் 500-க்கும் அதிகமான தொழிலாளர்கள்  சுமார் நூறுவிதமான கார்களைக் கொண்டு தொங்கும் கார்கள் தோட்டத்தை உருவாக்கினார். சுமார் 25 நாள்கள் உழைப்பில் இந்த தொங்கும் தோட்டம் அமைக்கப்பட்டது. விவேக்  மெர்வினின் இசையமைப்பில் பிரபுதேவாவின் அறிமுகப் பாடல் இதில் படமாக்கப்பட்டுள்ளது.  ஆனந்த குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com