லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்து வெளியான படம் "சண்டக்கோழி'. வித்தியாச கதைக் களத்தைக் கொண்டு வெளிவந்த இப்படம் விமர்ச ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பிரம்மாணட வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் இருந்தன. லிங்குசாமி தரப்பிலும் இத்தகவல் உறுதி செய்யப்பட்டு வந்தன. இதையடுத்து தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் சென்னையில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதற்காக பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கும் பணி கடந்த வாரம் பூஜையுடன் தொடங்கியுள்ளது. சென்னையில் உள்ள பின்னிமில்லில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் 500 கடைகள், கோயில் திருவிழா கொண்டாட்டம் என பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு வந்தன. இந்த அரங்குகளில் முதற்கட்டமாக சுமார் 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்தடுத்தக் கட்டப் படப்பிடிப்புகள் உடனடியாக தொடங்கி நடைபெறவுள்ளது. பொங்கல் பண்டிகை வெளியீடாக படம் திரைக்கு வருகிறது.