தினமணி கொண்டாட்டம்
மூன்றுமுறை மகிழ்ச்சி!
என்னுடைய வாழ்க்கையில் -ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்-நான் மூன்று முறை மகிழ்ச்சியடைந்தேன்.
என்னுடைய வாழ்க்கையில் -ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்-நான் மூன்று முறை மகிழ்ச்சியடைந்தேன்.
முதன்முதலில் இந்த நாட்டுக்குத் "தமிழ்நாடு' என்ற பெயர் சூட்டி,அதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி, கட்சி பாகுபாடு இன்றி அனைவரும் சட்டமன்றத்தில் "தமிழ்நாடு வாழ்க' என்று முழக்கம் செய்தபோது என் 58 ஆண்டுகாலத்திலும் கீதத்தை-செவியில் பாயாத செந்தேனை-பார்த்தறியாத காட்சியை நான் உணர்ந்தேன்.
இரண்டாவதாக, சுயமரியாதைத் திருமணங்களைச் செல்லுபடியாக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தபோது மகிழ்ந்தேன்.
மூன்றாவதாக,இனி தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இந்தி இல்லை என்று அறிவித்தபோது மகிழ்ந்தேன்.
("சட்டமன்றத்தில் அண்ணா' புத்தகத்திலிருந்து)
திருநீலக்குடி மா.உலகநாதன்.