நல்ல வாய்ப்புகள் வேண்டும்

"புகைப்படம்', "மாத்தி யோசி', "கோரிப்பாளையம்' ஆகிய படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் அரீஷ் குமார். 
நல்ல வாய்ப்புகள் வேண்டும்

"புகைப்படம்', "மாத்தி யோசி', "கோரிப்பாளையம்' ஆகிய படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் அரீஷ் குமார். 
"சிந்துபைரவி', "புன்னகை மன்னன்', "அண்ணாமலை',"பாட்ஷா' உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றிய படத் தொகுப்பாளர் கணேஷ்குமாரின் மகன். அரீஷ்குமார் பேசும் போது... "கோரிப்பாளையம்' படம்தான் என்னை கவனிக்க வைத்தது. ஆனால் அதற்கடுத்து என்னை மட்டும் தனியாக அடையாளப்படுத்தும் விதமான படங்கள் சரியாக அமையவில்லை. அப்படி தேர்வு செய்து நடித்த படங்களும் வெற்றி பெறாததால் மீண்டும் ஒரு அறிமுக நடிகருக்கான வேகத்துடன் தான் ஓடவேண்டி இருக்கிறது. எல்லோருக்கும் ஒரு திருப்புமுனை வரும். அதற்காகத்தான் காத்திருக்கிறோம். விக்ரமுக்கு சேது போல, அது சட்டென நிகழ்ந்து விடும். அது போல் ஒரு தருணத்துக்காக காத்திருக்கிறேன். எந்த சுமையையும் அதற்காக தாங்க தயாராக இருக்கிறேன். நல்ல வாய்ப்புகள்தான் வேண்டும். சினிமாவிற்கு புதியவர்களாக இருந்தால், ஒரு படம் தோல்வி என்றால் அடுத்து வேறு ஏதாவது வேலையை பார்க்க போய்விடுவார்கள்.. ஆனால் நான் சினிமா குடும்பத்தில் இருந்து வந்தவன். சினிமாவை அணுஅணுவாக ரசித்து வளர்ந்தவன்.. அப்படி நான் நேசித்த சினிமாவை விட்டு எங்கே போவது...? தொலைத்த இடத்திலேயே தான் தேடியாக வேண்டும். அந்த தேடலில், அந்த ஓட்டத்தில் நம்மை நிறுத்திக்கொள்வதற்காக ஒன்றிரண்டு படங்களை ஒப்புக்கொண்டு நடித்ததும் கூட தவறாகப் போய்விட்டது. தற்போது ஒரு நல்ல கதையை தேர்வு செய்து ஒப்புக்கொண்டுள்ளேன். வெற்றிக்கோ, தோல்விக்கோ நம்மைச்சுற்றி நான்கு பேர் காரணமாக இருப்பார்கள். நானும் அப்படிப்பட்ட நான்கு பேர்களை தேடிக்கொண்டு இருக்கிறேன் என்கிறார் நம்பிக்கையுடன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com