தமிழில் அறிமுகமாகும் அஞ்சு குரியன் 

"திட்டம் போட்டு திருடுற கூட்டம்', "டாவு' படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மஹா விஷ்ணு எழுதி இயக்கும் படத்தில் நடிக்கிறார் கயல் சந்திரன்
தமிழில் அறிமுகமாகும் அஞ்சு குரியன் 

"திட்டம் போட்டு திருடுற கூட்டம்', "டாவு' படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மஹா விஷ்ணு எழுதி இயக்கும் படத்தில் நடிக்கிறார் கயல் சந்திரன். இதில் "பிரேமம்' படத்தில் நடித்த அஞ்சு குரியன் கதாநாயகியாக நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது. படத்தின் திரைக்கதை அமைப்பு குறித்து இயக்குநர் பேசும் போது... "காதல்தான் கதையின் பிரதானம். இதுவரை சொல்லப்படாத காதல் என்று எதுவும் இல்லை. ஆனால், ரசிகர்கள் அணுகாத முறையில் திரைக்கதை மூலம் அதை சுவாரஸ்யப்படுத்தி இருக்கிறேன். காட்சிக்கு காட்சி எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த படமாக இருக்கும். சென்னை மற்றும் புதுச்சேரி பகுதிகளில் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கவுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கதைக் களம் அமைக்கப்பட்டுள்ளது. சமீப கால சினிமாக்களில் பெண்கள் மீது பரவலாக விமர்சனங்கள் வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அதை உடைக்கும் விதமாக இப்படம் இருக்கும். சன் டி.வி.யில் ஒளிபரப்பாகி வந்த "அசத்த போவது யாரு' காமெடி நிகழ்ச்சியில் பங்கு பெற்றேன். இப்போது இப்படத்தின் மூலம் இயக்குநராக வளர்ந்துள்ளேன். புதிய விஷயத்தை புதிய கோணத்தில் கொடுக்கும் விதமாக இப்படம் உருவாகி வருகிறது. ஏப்ரல் மாதத்தில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம்'' என்றார் மஹா விஷ்ணு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com