புதிய தொடர்: சிந்தை கவர்ந்த திருவிழாக்கள்

பிறக்கும்பொழுது பூமியில் தன் இடத்தை அறிந்துகொள்ள முடியாத மனிதன் இறக்கும்பொழுதும் செல்லும் இடத்தைக்
புதிய தொடர்: சிந்தை கவர்ந்த திருவிழாக்கள்

பிறக்கும்பொழுது பூமியில் தன் இடத்தை அறிந்துகொள்ள முடியாத மனிதன் இறக்கும்பொழுதும் செல்லும் இடத்தைக் கணிக்க முடியாதவனாக இருக்கிறான்.

""கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்'' என்பதற்கு ஏற்றார்போல சொர்க்கம்,  நரகம் என்பது எல்லாம் கண்டு வந்து சொன்னவர் என்று எவரும் இலர் என்பதே உண்மை.

இப்படிப்பட்ட ஆரம்பமும், முடிவும் அறிய முடியாத உலக வாழ்க்கையில் அடுத்த  கணம் என்ன நடக்கும் என்பதைச் சொல்ல முடியாத நிலையில் மனிதர்கள் எதிர்கொள்ளும், வேதனைகளும், சோதனைகளும் ஓய்வில்லாத அலைகளுக்கு  ஒப்பாக இருக்கிறது. இன்பம் என்பது எட்டிப்பார்த்துவிட்டு போகும் வானவில்லாக இருக்கிறது.

மனிதன் தன்னுடைய சோர்வைத் தீர்த்துக்கொள்ள, தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள, பயத்திலிருந்து விடுபட்டு மன அமைதியுடன் வாழ, பெற்ற இன்பத்தைப் பகிர்ந்து கொள்ள விழாக்களை உருவாக்கிக் கொண்டாடி மகிழ்ந்தான்.

மனிதனை கீழே விழாமல் மீண்டும் புதுத் தெம்போடு வாழ வைத்த விழாக்கள் "திருவிழாக்கள்' ஆயின.

"மகர சங்கராந்தி'  என்று வட இந்தியாவிலும், பொங்கல் பண்டிகை என்று தென் இந்தியாவிலும் கொண்டாடப்படும் பண்டிகைக்கு முதல் நாள் நாம்  "போகி'  என்று கொண்டாடி பழைய சாமான்களை ஒதுக்கி எரிப்பது, கடந்துபோன கசப்பான சம்பவங்களைப் புறம்தள்ளி, புதிய வாழ்க்கையை உற்சாகத்துடன் எதிர்கொள்ள நம்மைத் தயாராகிக் கொள்வதாக இருக்கிறது.

ஆதிமனிதன் எதனால் இயற்கையை வணங்க ஆரம்பித்தான்?  பஞ்சபூதங்களின் வெளிப்பாடுகள் அவனை வாழவும் வைத்தது, அழிக்கவும் செய்தது. வாழ வைத்த பொழுது அவற்றைக் கொண்டாடி மகிழ்ந்தான். அழித்தபொழுது பயத்தினால் அவற்றை வணங்கினான். பல திருவிழாக்கள் மூலம் பெற்ற நன்மைகளுக்காக தான் உருவகப்படுத்திய தெய்வங்களைப் போற்றி மகிழ்ந்தான், அருள் வேண்டியும்  விழா எடுத்தான். பயம் தெளிந்து தெய்வம் காப்பாற்றும் என்ற தன்னம்பிக்கை பெறவும் விழா எடுத்தான்.
சங்க காலத்தில் இருந்தே திருவிழாக்கள் கொண்டாடப்பட்டிருக்கின்றன. அதில் "இந்திர விழா'  என்பது மிக விமரிசையாக இருபத்து எட்டு (28) நாள்கள் கொண்டாடப்பட்டதாக சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை காப்பியங்கள் எடுத்துரைக்கின்றன.

மனிதனுக்கு உணவு ஒன்றே எல்லாத் தேவைகளிலும் அதி முக்கியமானது. அதிக விளைச்சல் இருந்தால்தான்,  வயிறு நிறைய உணவு கிடைக்கும். குடிமக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். ஆரோக்கியமான சமுதாயத்திடம் இருந்துதான் கலைகள் பிறக்கும், தொழில்கள் பெருகும், செல்வம் கொழிக்கும்.

மணிமேகலை காப்பியத்தின்படி ஒரு சமயம் சோழநாட்டில் பெரும் வறட்சியும், பஞ்சமும் தலை விரித்தாடியது. அந்தச் சமயத்தில், அகஸ்திய முனிவர் சோழ நாட்டின் அரசனால்  "தொடித்தோட் செம்பியனிடம்'  இந்திரனுக்கு விழா எடுக்கக் கூறினாராம். மழைக் கடவுளான இந்திரனும் இந்த விழாவால் மனம் மகிழ்ந்து, பெரும் மழையை ஏற்படுத்த நாட்டில் பஞ்சம் நீங்கியதாம்.

தொடித்தோட் செம்பியனின் வழித்தோன்றல்கள் அனைவரும் இந்திர விழா எடுத்ததால் தேசம் செழிப்புற்று விளங்கியிருந்ததாம்.
தண்டோரா போட்டு இந்திர விழாவின் தொடக்க நாளை அறிவிக்க, மக்கள் தெருக்களையும், வீடுகளையும் சுத்தம் செய்து, பிறகு வீடுகளை மிக நேர்த்தியாக அலங்கரிப்பார்கள். நாட்டின் தலைசிறந்த அதிகாரிகள் மன்னருக்குப் பரிசுப் பொருள்களை வழங்கி அவரும், அவருடைய குடிமக்களும் நல்வாழ்வு வாழ வாழ்த்துவார்களாம். கவிஞர்களும், பாணர்களும் தொழில், உணவு சம்பந்தமான விழாக்களும் உலக அரங்கில் அரங்கேறுகின்றன. சென்னையில் மார்கழி மாதத்தில் நடைபெறும் இசை விழாவுக்கு உலகின் பல பாகங்களில் இருந்து இசைப்பிரியர்கள் வந்து குவிகிறார்கள். உணவு விழா என்றால் அமெரிக்காவின் தேசிய வேர்க்கடலை, கேல்வே நாட்டின்ஆயிஸ்டர் விழா, ஜெர்மனியின் அக்டோபர் பெஸ்ட் என்கின்ற "பியர் விழா'  இது உலக விழாக்களில் தலையானதாக போற்றப்படுகிறது.  "கேன்ஸ்'  திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டின் மதிப்பை பன்மடங்கு உயர்த்தியிருக்கிறது.

திருவிழாக்களில் கலந்துகொள்வது என்றால் எனக்கு பால் பாயசம் சாப்பிடுவதுபோல இனிக்கும். இந்தியாவின் பல மாநிலங்களுக்குச் செல்லும் பொழுதும், வெளிநாடுகளுக்கு பயணப்படும்போதும் அங்கே முக்கியமான திருவிழாக்கள் நடக்கும் நாள்களைக் கணக்கிட்டு அந்தச் சமயத்தில் அங்கே இருக்கும்படி பார்த்துக் கொள்வேன். திருவிழாவுக்காகவே மக்கள் அணியும் பிரத்தியேக உடைகள், உணவு வகைகள், கலை நிகழ்ச்சிகள், கடை விரிக்கப்பட்டிருக்கும் கலைப் பொருள்கள், அப்பப்பா "எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் இறைவா' என்று மனம் குதியாட்டம் போடும்.

இந்தியாவில் உள்ள மொத்தம் 29 மாநிலங்களில் 22 முக்கிய மொழிகளும், இவை தவிர 720 வட்டார மொழிகளும் பேசப்படுகின்றன. இவ்வளவு வேற்றுமையில் ஒற்றுமை எப்படி சாத்தியப்படுகிறது? பலவிதமான திருவிழாக்கள் மாநிலங்கள்தோறும் நடைபெறுவதுடன் அதில் எல்லாவிதமான மக்களும் "நான் இந்தியன்' என்ற உணர்வோடு கலந்துகொள்வதால் கலாசாரப் பரிமாற்றம் நடைபெறுகிறது. கொண்டாட்டத்தில் மக்கள் ஒருங்கிணைகிறார்கள், கைகோர்த்துக் கொள்கிறார்கள், நடனமாடுகிறார்கள், உண்ணுகிறார்கள், ஒருவருடைய  பாரம்பரியத்தை மற்றவர் மதிக்கக் கற்றுக் கொள்கிறார்கள். இதனால் ஏற்படும் பிணைப்பில் மலருவதுதான் வேற்றுமையில் ஒற்றுமை.
இந்தியாவின் பல மாநிலங்களுக்கும், உலகின் பல நாடுகளுக்கும் நான் சென்று களித்த திருவிழாக்களையும் அதில் பெற்ற அனுபவங்களையும் இனிவரும் வாரங்களில் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com