வாராகி நடித்து இயக்கி வரும் படம் "சிவா மனசுல புஷ்பா'. சமீபமாக அரசியல் அரங்கில் எழுந்து அடங்கிய சர்ச்சைகளின் கோர்வையாக இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஷிவானி குரோவர், நதியா ஸ்ரீ இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். சுதா, கே ராஜன், தவசிராஜ், விஜயகுமார் உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களை ஏற்கின்றனர். ஸ்ரீ வாராகி அம்மன் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படம் குறித்து வாராகி பேசும் போது... இந்திய அரசியல் அரங்கை பொருத்தவரை சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. அப்படி எழும் சர்ச்சைகளை வேறு ஒரு பிரச்னை வந்து மறக்கடித்து விடுகிறது. ஆனால் அதன் உள்ளுக்குள் இருக்கும் திரை மறைவு ரகசியங்கள் வெளியே தெரிவதில்லை. அதை வெளிச்சம் போட்டும் காட்டும் விதமாக இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. தொழில்நுட்பக் கலைஞர்களைப் பொருத்தவரை நிறைய மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. அதற்கு இந்தப் படம் நன்றாக வர வேண்டும் என்பதுதான் காரணம். 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்து வருகிறது என்றார் வாராகி. ஒளிப்பதிவு - செல்வம். படத்தொகுப்பு - சதீஷ்குமார். இசை - அருணகிரி. இணைத் தயாரிப்பு - சுஜிதா செல்வராஜ்.