ஐஸ்வர்யாராய் மீது கேத்ரீனா காட்டம்!

ரன்பீர் கபூரை தீவிரமாக காதலித்த கேத்ரினா கைப், திடீரென அவரை பிரிந்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து "ஜகா ஜாசூஸ்' என்ற ஹிந்தி படத்தில் நடித்துள்ளனர்.
ஐஸ்வர்யாராய் மீது கேத்ரீனா காட்டம்!

ரன்பீர் கபூரை தீவிரமாக காதலித்த கேத்ரினா கைப், திடீரென அவரை பிரிந்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து "ஜகா ஜாசூஸ்' என்ற ஹிந்தி படத்தில் நடித்துள்ளனர். அடுத்த மாதம் இந்தப் படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷனுக்காக வித்தியாசமான நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சில நடிகர், நடிகைகளின் பெயர்களை ரன்பீர் சொன்னதும் உடனடியாக தனது மனதில் அவர்களைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதை கேத்ரினா சொல்ல வேண்டும். அமிதாப்பச்சன் தொடங்கி ஒவ்வொருவரின் பெயரை சொன்னதும், அதற்கு பதிலளித்துக் கொண்டே வந்தார் கேத்ரினா. அப்போது ஐஸ்வர்யா ராய் என ரன்பீர் சொன்னதும் சற்றும் யோசிக்காமல் "நரி' என கேத்ரினா சொன்னார். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐஸ்வர்யா ராயுடன் "ஏ தில் ஹே முஷ்கில்' படத்தில் ரன்பீர் கபூர் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. ரன்பீரை பிரிந்தாலும் இன்னும் அவரை கேத்ரினா மறக்கவில்லை என்றும், அதனால்தான் இப்படி சொன்னதாக பாலிவுட்டில் ஒரு தரப்பு சொல்கிறது. ஆனால் தனது பட வாய்ப்பு ஒன்றை ஐஸ்வர்யாராய் பறித்ததால் அவர் இப்படி விமர்சித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com