ஏமாலி

"முகவரி', "தொட்டி ஜெயா', "6 மெழுகுவர்த்திகள்' உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் வி.இசட். துரை. இவரின் அடுத்தப் படைப்பாக உருவாகி வரும் படம் ஏமாலி.
ஏமாலி

"முகவரி', "தொட்டி ஜெயா', "6 மெழுகுவர்த்திகள்' உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் வி.இசட். துரை. இவரின் அடுத்தப் படைப்பாக உருவாகி வரும் படம் ஏமாலி. லதா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சாம் ஜோன்ஸ், அதுல்யா ரவி, ரோஷிணி பிரகாஷ், சிங்கம் புலி, பால சரவணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படம் குறித்து இயக்குநரிடம் பேசும் போது... 
""காதல்தான் கதையின் பிரதான கரு. காதலித்துக் கொண்டிருப்பவர்கள், காதலித்தவர்கள், காதலிக்க போகிறவர்கள், காதலிக்கலாமா வேண்டாமா என்று யோசித்து கொண்டிருப்பவர்கள் என எல்லாருக்கும் ஒரு பாதிப்பை கொடுக்கிற படம்தான் ஏமாலி. காதல் என்ற போர்வையில் காலம் காலமாக நடந்து வரும், ஒரு தவறை இதில் துணிச்சலாக சொல்ல முன் வந்திருக்கிறேன். இது தமிழ் சினிமாவின் கதைக் களத்துக்கே புதிது. அதோடு இது நான்கு அடுக்கு கதை. நான்கு தளங்களிலும் நான்கு விதமாக பயணம். அதற்கேற்றவாறு நடிப்பவர்களுக்கு நான்கு விதமான வாழ்க்கை. இதுவரை இந்திய சினிமாவிலேயே இந்த பாணி கையாளப்படவில்லை. "ஏமாளி'யை ஏன் "ஏமாலி' என்று மாற்றி வைத்திருக்கிறோம் என்பதற்கு படத்தில் அழகான ஒரு "ட்விஸ்ட்' உண்டு. படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. பிப்ரவரி மாத வெளியீடாக படம் திரைக்கு வருகிறது'' என்றார் வி.இசட்.துரை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com