பெண் கொடுமைகளுக்கு எதிரான தீர்க்கமான ஒரு அரசியல் பார்வையை முன் வைக்கும் விதமாக உருவாகி வரும் படம் "உறுதி கொள்'. கிஷோர், மேனகா, காளி வெங்கட், தென்னவன், சர்மிளா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை எழுதி இயக்குகிறார் அய்யனார். படம் குறித்து இயக்குநர் பேசும் போது, ""ஆண்மையும் பெண்மையும் உருவங்கள் மட்டுமே இல்லை. அதில் அவ்வளவு உணர்வுகள் உண்டு. ஒருவரின் வலியை இன்னொருவர் புரிந்து கொள்ளும் போதுதான் வாழ்க்கை அழகாக மாறுகிறது. ஒரு விஷயத்தை இன்னொரு விஷயத்தில் தேடும் போதும், தொலைக்கும் போதும்தான் நாம் மனிதர்களாக ஆகிறோம் என்பது நம்பிக்கை. பெண்கள் உடலளவில் பலவீனமானவர்கள் என்பதைத் தெரிந்து கொண்டு எத்தனை பிரச்னைகளை உருவாக்கி விடுகிறது சமூகம். பெண்களுக்கு எதிராக சமீபமாக அரங்கேற்றப்பட்டு வரும் பாலியல் தொந்தரவுகளை முன் வைக்கும் விதமாக இப்படம் உருவாகியுள்ளது. வரும் 6-ஆம் தேதி படம் திரைக்கு வரவுள்ளது'' என்றார் இயக்குநர்.