• கவிஞர் கண்ணதாசனின் மூத்த மகன் கண்மணி சுப்பு "அப்பாவின் திரைப்பயணம்' என்ற தொடர் கட்டுரையை "நமது செட்டிநாடு' இதழில் எழுதி வருகிறார்.
• கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜிடம் செவர்லே, வோக்ஸ் வேகன், ஆல்டோ - கார்கள் உண்டு. இப்போது புதிதாக பி.எம்.டபிள்யூ - காரும் சேர்ந்திருக்கிறது. ஆனால், வீட்டில் இன்றைக்கும் சிறிய டிவி.தான்!
• எழுத்தாளர் எஸ்.சங்கர நாராயணனின் "தவளைக் கச்சேரி' கவிதைத் தொகுப்பு வெளியாகிறது. "வெல்லும் சொல்' பதிப்பகம் இத்தொகுப்பை வெளியிடுகிறது.
• எழுத்தாளர்-சூழலியலாளர் நக்கீரனின் மனைவி மீனா, அவரை அவர் போக்கில் செயல்பட அனுமதித்து, குடும்பத்தை தானே நிர்வகித்துக்கொள்வதாக சொல்லி இருக்கிறார். நக்கீரன் தனது முகநூல் பக்கத்தில் இதனைப் பதிவு செய்திருக்கிறார்.
• நடிகை ஷ்ரேயா மும்பையில் நடத்தும் அழகு நிலையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு தந்திருக்கிறார். எளிமையை விரும்பும் ஷ்ரேயா, படப்பிடிப்புக்காக போர்ச்சுக்கல் சென்றபோது, விமானத்தை தவிர்த்து, லிஸ்பனில் இருந்து பார்சலோனாவுக்கு தரைவழிப் பயணமாகவே சென்றிருக்கிறார். எல்லா படப்பிடப்பிலும் இப்படித்தானாம்!