ஐந்து பேர் ஐந்து செய்தி

கவிஞர் கண்ணதாசனின் மூத்த மகன் கண்மணி சுப்பு "அப்பாவின் திரைப்பயணம்' என்ற தொடர் கட்டுரையை "நமது செட்டிநாடு' இதழில் எழுதி வருகிறார்.
ஐந்து பேர் ஐந்து செய்தி

• கவிஞர் கண்ணதாசனின் மூத்த மகன் கண்மணி சுப்பு "அப்பாவின் திரைப்பயணம்' என்ற தொடர் கட்டுரையை "நமது செட்டிநாடு' இதழில் எழுதி வருகிறார்.

• கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜிடம் செவர்லே, வோக்ஸ் வேகன், ஆல்டோ - கார்கள் உண்டு. இப்போது புதிதாக பி.எம்.டபிள்யூ - காரும் சேர்ந்திருக்கிறது. ஆனால், வீட்டில் இன்றைக்கும் சிறிய டிவி.தான்!

• எழுத்தாளர் எஸ்.சங்கர நாராயணனின் "தவளைக் கச்சேரி' கவிதைத் தொகுப்பு வெளியாகிறது.  "வெல்லும் சொல்' பதிப்பகம் இத்தொகுப்பை வெளியிடுகிறது. 

• எழுத்தாளர்-சூழலியலாளர் நக்கீரனின் மனைவி மீனா,  அவரை அவர் போக்கில் செயல்பட அனுமதித்து, குடும்பத்தை தானே நிர்வகித்துக்கொள்வதாக சொல்லி இருக்கிறார். நக்கீரன் தனது முகநூல் பக்கத்தில் இதனைப் பதிவு செய்திருக்கிறார்.

• நடிகை ஷ்ரேயா மும்பையில் நடத்தும் அழகு நிலையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு தந்திருக்கிறார். எளிமையை விரும்பும் ஷ்ரேயா, படப்பிடிப்புக்காக போர்ச்சுக்கல் சென்றபோது, விமானத்தை தவிர்த்து, லிஸ்பனில் இருந்து பார்சலோனாவுக்கு தரைவழிப் பயணமாகவே சென்றிருக்கிறார். எல்லா படப்பிடப்பிலும் இப்படித்தானாம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com