என்னோடு நீ இருந்தால்...

சைட்டோ பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "என்னோடு நீ இருந்தால்'. கதை, திரைக்கதை எழுதி இயக்குவதுடன் கதாநாயகனாகவும் நடிக்கிறார் மு.ரா.சத்யா.
என்னோடு நீ இருந்தால்...

சைட்டோ பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "என்னோடு நீ இருந்தால்'. கதை, திரைக்கதை எழுதி இயக்குவதுடன் கதாநாயகனாகவும் நடிக்கிறார் மு.ரா.சத்யா. கதாநாயகியாக மானசா நாயர் நடிக்கிறார். வெண்ணிற ஆடை மூர்த்தி, ரோகிணி, அஜய்ரத்னம், வையாபுரி, பிளாக்பாண்டி, அழகு, மீரா கிருஷ்ணன், சஞ்சய், சாந்தி உள்ளிட்டோர் முக்கிய வேடங்கள் ஏற்கிறார்கள். படத்தின் கதைக் கரு குறித்து மு.ரா.சத்யாவிடம் பேசுகையில், ""தற்கால சூழலில் காதல் என்பதன் பொருள் மாறி விட்டது. பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் காதலில் இருந்த பொன்னான தருணங்கள் இப்போதைய காதலர்களுக்குக் கிடைப்பதில்லை. காத்திருத்தல் என்பது இல்லாமலேயே போய் விட்டது. தொழில்நுட்பம் எல்லாவற்றையும் சுருக்கி விட்டது. அதன் பாதிப்பில் எழுதப்பட்ட கதை இது. சில நாட்கள் மாயமாகி விட்ட தன் காதலியை தேடி போகிறான் காதலன். அப்போது அவனுக்கு சில திகில் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இறுதியில் தன் காதலியை கண்டுபிடித்தானா... அந்த காதலுக்கு என்ன பிரச்னை என்பதை கண்டுபிடித்தானா? என்பது இந்த கதையின் பிரதான பின்னணியாக வைக்கப்பட்டுள்ளது'' என்றார். படப்
பிடிப்பு முடிந்து இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் பாடல்கள் வெளியாகவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com