தி.மு.க.தலைவர் மு.கருணாநிதி திரைக்கதை-வசனத்தில் வெளிவந்த "ராமானுஜர்' தொலைக்காட்சித் தொடரின் தெலுங்கு ஒளிபரப்பு உரிமையை திருப்பதி தேவஸ்தானத் தொலைக்காட்சி வாங்கியிருக்கிறது.
எழுத்தாளர் கௌசிகன் "வாண்டுமாமா' என்ற பெயரில் 160 நூல்கள் இயற்றியுள்ளார். இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி. "வாண்டுமாமா' என்ற பெயரை இவருக்குச் சூட்டியவர் ஓவியர் மாலி.
ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் ஒளிந்திருக்கும் கனவுகளில் ஒன்று ஐ.ஏ.எஸ்., ஆவது. இக்கனவு நனவாவதற்கு என்னென்ன வழிமுறைகள்? "வெற்றிப் படிக்கட்டுகள்' நூலில் விவரித்திருக்கிறார் வெ.இறையன்பு.
ஒவ்வொரு மாதமும் வெளியாகக் கூடிய இலக்கிய நூல்களை விசாரித்து, உடனுக்குடன் வாங்கிப் படித்து விடுகிறார் கமல்ஹாசன். அல்லது நண்பர்களிடம் பேசி புத்தகத்தை வரவழைத்து படித்து விடுகிறார்.
நடிகை ரோகிணிக்கு இலக்கியத்தின் பேரில் உள்ள ஈடுபாடு யாவரும் அறிந்ததே! நிறையக் கவிதைகளை எழுதித் தொகுத்து ஒரு நூலாக விரைவில் வெளியிட இருக்கிறார்.