முழுக்க முழுக்க கதையில் ஒருவர் மட்டுமே நடிக்கும் படம் "கார்கில்'. சென்னையிலிருந்து பெங்களூருக்கு காரில் போகிற ஒருவரின் அனுபவங்
களே கதை. காதலில் ஏற்பட்ட உரசலால் பயணம் போகிற காதலனுக்கு, அந்த பயணங்கள் உணர்த்திய விஷயங்கள் என்ன என்பது திரைக்கதை. பின் அந்த காதல் வெற்றி பெற்றதா என்பது கிளைமாக்ஸ். "ஜிஷ்னு' என்பவர் அந்த ஒற்றை நபராக நடிக்கிறார். கணேஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். விக்னேஷ் பாய் இசையமைக்கிறார். பாடல்களை பாரி இளவழகன், தர்மா இருவரும் எழுதுகிறார்கள். படத்தொகுப்பாளராக அபிநாத் பணியாற்றுகிறார். சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பெரும்பான்மையான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டார். இம்மாத இறுதியில் படம் வெளியாகவுள்ளது.