• இந்திரா காந்தியின் 20 அம்சத் திட்டங்களுக்காக 20 பாடல்களை கண்ணதாசன் எழுதினார். இசை குன்னக்குடி வைத்திய நாதன். வானொலிக்காக இப்பாடல்களை எழுதி வாங்கியவர் ஏ.நடராஜன். முன்னாள் இயக்குநர்.
•நடிகர் சிவகுமார் வாரம்தோறும் இலக்கியவாதிகளை, முக்கிய ஆளுமைகளை சந்தித்துப் பேசி வருகிறார்.
• "எழுத்தாளர்கள் எல்லோரையும் பிடிக்கும். நான் ஓவியம் வரைய களங்கள் அமைத்துக் கொடுத்த சுஜாதாவையும், புஷ்பா தங்க துரையையும் கூடுதலாகப் பிடிக்கும். முதன் முதலாக என் படங்களை "டபுள் ஸ்ப்ரெட்டில்' போட்டவர் ஆசிரியர் சாவி'. நேர்காணல் ஒன்றில் ஓவியர் ஜெயராஜ்.
• எழுத்தாளர் பவா செல்லதுரை திருவண்ணாமலையில் "கதை கேட்க வாங்க' என்ற இலக்கிய நிகழ்வை அரங்கேற்றி வருகிறார். இம்மாதம் வண்ணதாசன் கதை. ஷங்கர் போன்ற பிரபல திரைப்பட இயக்குநர்கள் கதை கேட்க இங்கு கூடுகிறார்களாம்.
• கவிஞர் மகுடேஸ்வரன் தமிழ் இலக்கணத்தை அனைவரும் புரிந்துகொள்ளும் பொருட்டு மிக எளிமையாக பேசி வருகிறார். இலக்கணம் என்றால், மூடு மந்திரமாக இருப்பதை அந்தப் பேச்சு குறைத்து விடுகிறது.