300 கோடி பட்ஜெட்டில் கர்ணனாக விக்ரம்

புராண கதையாக உருவாகும் படத்தில் நடிக்கிறார் விக்ரம்.  "மஹாவீர் கர்ணா' என்ற பெயரில் உருவாகும் இப்படத்தில் கர்ணனாக நடிக்கிறார் விக்ரம். இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடந்தது.

புராண கதையாக உருவாகும் படத்தில் நடிக்கிறார் விக்ரம்.  "மஹாவீர் கர்ணா' என்ற பெயரில் உருவாகும் இப்படத்தில் கர்ணனாக நடிக்கிறார் விக்ரம். இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடந்தது. ஆர்.எஸ்.விமல் இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தை அமெரிக்காவைச் சேர்ந்த  யுனைடெட் ஃபிலிம் கிங்டம் நிறுவனம் தயாரிக்கிறது. சுமார் ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ள இப்படத்தின் பூஜையில் மலையாள நடிகர்கள் சுரேஷ் கோபி, உன்னி கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இப்படத்தில் வரும் கர்ணனின் 30 அடி உயர தேரில், பத்மநாப கோயிலின் புனித மணி பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மணி கோயில் சார்பாக படக்குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ளது.  மகாபாரதத்தில் வரும் கர்ணனின் கதையை மையமாக கொண்டு உருவாகவுள்ள இப்படம் தமிழ், மலையாளம் மொழிகளில் உருவாகவுள்ளது.  இதன் கிராபிக்ஸ் உள்ளிட்ட இறுதிக் கட்ட பணிகளில் சர்வதேச கலைஞர்கள் பணிபுரிய இருக்கிறார்கள். இதற்காக பிரத்யேக அரங்குகள் ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com