சாப்பாடு போட்ட மொழி தமிழ்!

"ஜெய்ஹிந்த்-2' படத்தைத் தொடர்ந்து நடிகர் அர்ஜுன் தயாரித்து இயக்கியுள்ள படம் "சொல்லிவிடவா'. தன் மகள் ஐஸ்வர்யாவை கதாநாயகியாக வைத்து இயக்கியிருக்கும்
சாப்பாடு போட்ட மொழி தமிழ்!

"ஜெய்ஹிந்த்-2' படத்தைத் தொடர்ந்து நடிகர் அர்ஜுன் தயாரித்து இயக்கியுள்ள படம் "சொல்லிவிடவா'. தன் மகள் ஐஸ்வர்யாவை கதாநாயகியாக வைத்து இயக்கியிருக்கும் படத்தில், கன்னடத்தில் பல படங்கள் நடித்துள்ள சந்தன் குமார் கதாநாயகனாக நடிக்கிறார். கன்னடம், தமிழ் என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வரும் 9-ஆம் தேதி வெளியாகவுள்ளது. படம் குறித்து அர்ஜூன் பேசும்போது... ""என் மகள் நடிப்பில் ஒரு படம் இயக்க வேண்டும் என்று ஆரம்பத்திலேயே ஓர் எண்ணம் இருந்தது. "பட்டத்து யானை' படம் போல் இல்லாமல் கொஞ்சம் வித்தியாசப்படுத்தி காட்ட வேண்டும் என்று தோன்றியது. அதற்காக மூன்று கதைகளை எழுதினேன். அதில் ஒன்றுதான் இது. ஐஸ்வர்யாவின் ஒப்புதல் இருந்ததால்தான் இந்த கதையை நான் இயக்க முன் வந்தேன். இப்படித்தான் இந்தப் படம் ஆரம்பமானது. இந்தப் படத்தில் ஐஸ்வர்யாவின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் விதமாக காட்சிகளை அமைத்துள்ளேன். கன்னடம், தமிழ் ரெண்டு மொழியுமே எனக்கு ரொம்ப நெருக்கமானது. கன்னடம் என் தாய்மொழி. தமிழ் எனக்கான ஒரு அடையாளத்தைக் கொடுத்து, எனக்கென ஓர் இடத்தைக் கொடுத்து சாப்பாடு போட்ட மொழி. இரண்டு மாநில மக்களுக்கும் என்னை தெரியும். தெலுங்கும் எனக்குப் பரிச்சயமான மொழிதான். ஆனால், மூன்று மொழிகளில் படம் எடுப்பது அவ்வளவு சுலபம் இல்லை. அதனால், எனக்கு நெருக்கமான மொழிகளில் நெருக்கமான மக்களுக்காக இந்தப் படம் எடுத்துள்ளேன்'' என்றார் அர்ஜுன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com