ஐந்து பேர் ஐந்து செய்தி

நடிகை வித்யா பாலனின் பிறந்தநாளை உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள். ஆச்சரியமாக இருக்கிறதா? அவரது பிறந்த தேதி ஜனவரி 1.
ஐந்து பேர் ஐந்து செய்தி

* எழுத்தாளர் ஜெயமோகன் திரைப்படங்களுக்கு வசனம் எழுத மாதக்கணக்கில் எடுத்துக் கொள்வதில்லையாம். ஒரு சில நாட்களிலேயே முடித்து கொடுத்துவிடுகிறார் என்று இயக்குநர்கள் தெரிவிக்கிறார்கள்.

* நடிகை வித்யா பாலனின் பிறந்தநாளை உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள். ஆச்சரியமாக இருக்கிறதா? அவரது பிறந்த தேதி ஜனவரி 1.

* எழுத்தாளர் தி.ஜானகிராமன் குறித்து ஆவணப்படம் எடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார் இயக்குநரும், பேராசிரியருமான சொர்ணவேல். இவர் மிக்சிகன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் சினிமா கற்பிக்கிறார்.

* எழுத்தாளர் எஸ்.ராம கிருஷ்ணன் தனது இலக்கிய உரைகளை அனைவரும் கேட்பதற்காக "தேசாந்திரி' என்ற யூடியூப் சேனலை உருவாக்கியுள்ளார்.

* நெல்லை வட்டார வழக்கில் எழுதிய "கிடைக்காடு', "ஆங்காரம்' போன்ற நாவல்களால் பேசப்பட்ட எழுத்தாளர் ஏக்நாத், பேச்சாளர் ஒருவரின் வாழ்க்கையை "அவயம்'என்ற பெயரில் மூன்றாவது நாவலாக எழுதி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com