தெரிந்த பெயர் தெரியாத விவரம்: எழும்பூர் ரயில் நிலையம்

சென்னை மாகாண ஆளுநராக இருந்த எலிஹூ யேல் என்பவரால், மொகலாய வைஸ்ராய் நவாப் சுல்ஃபிகர் அலி கானிடமிருந்து 1720-ஆம் ஆண்டு விலைக்கு வாங்கப்பட்ட இடம்தான் எழும்பூர்.
தெரிந்த பெயர் தெரியாத விவரம்: எழும்பூர் ரயில் நிலையம்
  • சென்னை மாகாண ஆளுநராக இருந்த எலிஹூ யேல் என்பவரால், மொகலாய வைஸ்ராய் நவாப் சுல்ஃபிகர் அலி கானிடமிருந்து 1720-ஆம் ஆண்டு விலைக்கு வாங்கப்பட்ட இடம்தான் எழும்பூர்.
     
  • சென்னை எழும்பூர் ரயில் நிலையம் இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய தொடர்வண்டி (ரயில்) நிலையங்களில் ஒன்றாகும். தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றது. 
     
  • இந்த ரயில் நிலையம் ஒரு கோட்டையாக இருந்தது. இதற்கு பெயர் "எழும்பூர் ரெடோ'. 
     
  • ஆரம்பத்தில் வெடிபொருட்கள் சேமிக்க பயன்படுத்தப்பட்டது.
     
  • இந்தக் கட்டடம் 2.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் 1.7 ஏக்கர் டாக்டர் பால் ஆண்டி என்பவரிடமிருந்து பெறப்பட்டது. பின்னர் செளத் இந்தியா ரெயில்வே நிறுவனம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியது.
     
  • இந்தோ-சாராசனிக் மற்றும் கோதிக் பாணியில் இக்கட்டடம் கட்டப்பட்டதாகும். ராபர்ட் சிஸ்ஹோம் என்ற ஆங்கிலேயர் கட்டடத்திற்கான வரைபடத்தை வடிவமைத்தார். 
     
  • பெங்களூரைச் சேர்ந்த டி. சாமிநாத பிள்ளையால் 1905-இல் செப்டம்பர் மாதம் கட்டுமானம் தொடங்கப்பட்டது. கட்டுமானத்திற்காக சுமார் 1.7 மில்லியன் செலவிடப்பட்டது. இதற்கான செங்கல் பூந்தமல்லியில் இருந்த சாமிநாத பிள்ளையின் சூளையில் தயாரானது. 
     
  • இந்த ரயில் நிலையம் 1908 ஜூன் 11 ம் தேதி திறந்து வைக்கப்பட்டது.
     
  • இந்த நிலையத்திற்கு ராபர்ட் கிளைவ் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. மக்கள் எதிர்ப்பின் காரணமாக, எழும்பூர் ரயில் நிலையம் என பெயர் வைக்கப்பட்டது. முதலில் மின்சாரம் இல்லாததால் ஜெனரேட்டர் பயன்படுத்தப்பட்டது. 
     
  • 1951-ஆம் ஆண்டு தெற்கு ரயில்வே உருவான பிறகு சென்னையின் முக்கிய மீட்டர்கேஜ் முனையமாக எழும்பூர் நிலையம் மாறியது.
     
  • தொடக்கத்தில் எழும்பூரில் இருந்து இலங்கையின் கொழும்பு நகர் வரை ரயில்கள் இயக்கப்பட்டன. கொழும்பு செல்லும் பயணிகள் எழும்பூர் - தனுஷ்கோடி போட் மெயிலில் பயணம் செய்வர். பின்னர் அவர்கள் தனுஷ்கோடியில் இறங்கி, படகு மூலம் இலங்கையின் தலைமன்னாருக்குச் செல்வர். தலைமன்னாரில் இருந்து கொழும்பு செல்ல ஒரு ரயில் தயாராக காத்திருக்கும். 
     
  • சிகாகோவில் உரையாற்றிய பின் விவேகானந்தர் இலங்கை வழியாக தனுஷ்கோடி வந்து, சென்னை எழும்பூர் வந்திறங்கினார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 
     
  • 1964ஆம் ஆண்டு வீசிய புயலில் தனுஷ்கோடி இருப்புப் பாதை முற்றிலுமாக அழிந்துபோனது. அத்துடன் இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
     
  • சுமார் 750 மீ நீளம் கொண்ட இந்த ரயில் நிலையத்தில் 11 நடைமேடைகள் உள்ளன. நடைமேடைகள் 1,2,3 குறைந்த நீளம் கொண்டவை. இவை சிறிய ரக ரயில்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. 
     
  • முக்கியமான 4ஆம் நடைமேடை எழும்பூர் ரயில் நிலையத்தின் மையப்பகுதியில் நீண்டுள்ளது. 5,6,7 ஆம் நடைமேடைகள் நீள ரக ரயில்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. ஆரம்பத்தில், இங்குள்ள நடைமேடை அருகே, கார்கள் வந்து செல்ல அனுமதிக்கப்பட்டது.
     
  • பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இரண்டாவது நுழைவுவாயில் ரூ. 115.3 மில்லியன் செலவில் கட்டப்பட்டு, 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த வாயில் திறக்கப்பட்டது.
     
  • தினமும் சுமார் 35 முக்கிய வழித்தடங்களுக்கு ரயில்கள் மற்றும் 118 புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஒன்றரை லட்சம் பயணிகள் பயணிக்கிறார்கள்.
     
  • உணவகங்கள், கட்டணக் கழிப்பிடங்கள், உதவி மையங்கள், "ப்ரௌசிங்' மையம், தங்கும் விடுதி, புத்தகக் கடைகள் என பல வசதிகள் இங்கு உண்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com