விஜய் மில்டன் இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் "கோலி சோடா'. வசூல் ரீதியாக இப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை எழுதி இயக்கிய விஜய் மில்டன் இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். மூன்று கட்டங்களாக நடந்த படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. சமுத்திரக்கனி, செம்பன் ஜோஷ், பரத் சீனி, வினோத். ஐசக் பரத், சுபிக்ஷô, க்ரிஷா, ரக்ஷிதா, ரோகிணி, சரவண சுப்பையா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இயக்குநர் கௌதம் வாசுதேவ்மேனன் கதையின் பிரதான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், படத்தின் இறுதி கட்டப் பணிகள் துவங்கியுள்ளன. இப்பணிகளை விரைவில் முடிக்கும் நோக்கில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் வெளியாகியுள்ள படத்தின் ட்ரெய்லருக்கு ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் விநியோக உரிமை விற்கப்பட்டுள்ளது. இப்படத்தை கிளாப் போர்டு புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில், சத்தியமூர்த்தி தமிழக திரையரங்க உரிமையை பெற்றுள்ளார். ஏப்ரல் மாதத்தில் இப்படம் வெளியாகவுள்ளது.