ஹாலிவுட் தரத்தில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை செய்யும் அளவுக்கு தர்யா என்ற பெயரில் ஸ்டூடியோ ஒன்றை உருவாக்கியுள்ளார் இசையமைப்பாளர் ரகு சவன்குமார். சென்னை முகப்பேரில் டப்பிங், ரெக்கார்டிங், மிக்சிங் என அனைத்தும் ஒரே இடத்தில் செய்யும் வசதியுடன் உதயமாகியுள்ளது இந்த ஸ்டூடியோ.
இது குறித்து ரகுசவன் குமார் பேசும் போது...
"உலக அளவில் நாம் வியந்து பார்க்கும் பல சினிமாக்களின் இறுதிக் கட்டப் பணிகள் தமிழகத்தில்தான் நடந்து வருகின்றன. ஈரான் இயக்குநர் மஜீத் தனது படங்களின் பெரும்பாலான பணிகளை சென்னையில்தான் முடிக்கிறார். அது போன்றே இன்னும் பல உலக இயக்குநர்கள் சென்னை ஸ்டூடியோக்களில் பணியாற்ற விரும்புகிறார்கள். அவர்களுக்கு துணை நிற்கும் விதமாக இந்த ஸ்டூடியோவை நான் உருவாக்கியிருக்கிறேன். இதில் பயன்படுத்தபடும் கருவிகள் வெளிநாட்டில் இருந்து இந்த ஸ்டூடியோவுக்கு இறக்குமதி செய்துள்ளேன். ஒலி சம்பந்தமான ரெக்கார்டிங், ரீரெக்கார்டிங் , மிக்சிங், மாஸ்டரிங் போன்ற எல்லா பணிகளையுமே இங்கே முடிக்கலாம். அதே நேரம் இங்கே மிகக்குறைந்த பட்ஜெட்டில் மிக நவீனமான தரமான போஸ்ட்புரடக்ஷன் வேலைகளை செய்து முடிக்க முடியும். கடந்த ஜனவரி மாதம் பாடகி சித்ரா, உன்னிகிருஷ்ணன் மற்றும் இசையமைப்பாளர் ஷிரத் இந்த ஸ்டூடியோவை திறந்து வைத்தனர். மூவரும் இந்த ஸ்டூடியோ தனித்தன்மையுடம் மிகுந்த நவீனமாக தரமுடன் இருப்பதாக பாராட்டினர்.இந்த ஸ்டூடியோவில் பல படங்களின் வேலைகள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது'' என்றார் ரகுசவன் குமார்.