தமிழில் விஜய் தேவரகொண்டா

"பெல்லி சூப்புலு', "அர்ஜுன் ரெட்டி' ஆகிய தெலுங்கு படங்களின் மூலம் புகழ்பெற்றவர் விஜய் தேவரகொண்டா.
தமிழில் விஜய் தேவரகொண்டா

"பெல்லி சூப்புலு', "அர்ஜுன் ரெட்டி' ஆகிய தெலுங்கு படங்களின் மூலம் புகழ்பெற்றவர் விஜய் தேவரகொண்டா. தமிழில் அறிமுகமாக காத்திருந்தவர், தற்போது "நோட்டா' என்ற படத்தின் மூலமாக தமிழுக்கு வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தில் மெஹ்ரின், சத்யராஜ் உள்பட பலர் நடிக்கின்றனர். ஆனந்த் சங்கர் இயக்குகிறார். சென்னையில் நடந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் தேவரகொண்டா பேசியது..." "எண்ணித் துணிக கருமம்' என்றார் திருவள்ளுவர். ஒரு விஷயத்தை ஆரம்பிப்பதற்கு முன், நிறைய யோசிக்க வேண்டும். அப்படி ஆரம்பித்துவிட்டால், அதைச் செய்து முடிப்பதைத் தவிர வேறு எதைப்பற்றியும் யோசிக்கக்கூடாது. இப்படித்தான் தமிழ் தெரியாததால், தமிழ்ப் படத்தில் நடிக்கலாமா? வேண்டாமா என்பது பற்றி நிறைய யோசித்தேன். இதனால், பல படங்களை நான் தவிர்த்தேன். "நோட்டா' கதையை ஆனந்த் சங்கர் சொன்னபோது, தமிழில் துணிச்சலுடன் நடிக்க முடிவு செய்தேன். தமிழ் பேச கற்றுக்கொண்டு, நானே இந்தப் படத்துக்கு டப்பிங் பேசுவேன். தமிழ் சினிமாவை மிகவும் பிடிக்கும். இங்குதான் பல அரிய முயற்சிகள் நடந்து வருகின்றன. அந்த விதத்தில் தமிழ் சினிமா எனக்கு சிறந்த இடம்'' என்றார். படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com