கேபுரொடக்சன்ஸ் -ஒய். எஸ். ஆர் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் படத்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர். படத்துக்கு இன்னும் பெயரிடப்படாத நிலையில், இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம் போன்ற இடங்களில் நடைபெற்றது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு 40 நாட்கள் இடை விடாமல் தாய்லாந்து அதை சுற்றி உள்ள இடங்களில் படமாக்கப்படவுள்ளன. ""விஜய் சேதுபதி நடிக்கும் படங்களின் வரிசையில் படத்தின் பெரும்பகுதி வெளிநாட்டில் படமாகிறது என்பது சிறப்பம்சம். அந்தளவுக்கு கதையும் சூழலும் அமைந்துள்ளதால் படப்பிடிப்பை வெளிநாடுகளில் நடத்துகிறோம்'' என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் அருண்குமார். ஏற்கெனவே விஜய் சேதுபதி நடித்த "பண்ணையாரும் பத்மினியும்', "சேதுபதி' ஆகிய படங்களை இயக்கிவர் அருண்குமார். படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு சென்னை, மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் நடைபெறவுள்ளது. படம் ஜனவரியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.