இணைய வெளியினிலே...

அவரவர் கொள்கைப்படிஅவரவர் சொல்வதே நியாயம் என்றாகிறது...என்றாலும், உண்மையான நியாயம்... வெல்லும் ஒரு நாள்.
இணைய வெளியினிலே...

முக நூலிலிருந்து....


நாம வெட்டியா இருக்கும் போது,
ஒருத்தன் போன் பண்ணமாட்டான்...
நாம தூங்கும்போது மட்டும்,
மாத்தி மாத்தி போன் பண்ணுவாங்க!
அப்படி என் தூக்கத்த கெடுக்குறதுல
உங்களுக்கு என்னடா சந்தோஷம்?

- பால முருகன் ஹிரித்திக்

அவரவர் கொள்கைப்படிஅவரவர் சொல்வதே நியாயம் என்றாகிறது...
என்றாலும், உண்மையான நியாயம்... வெல்லும் ஒரு நாள்.

- அறச் செல்வி

ரசகுல்லா கூட இருக்கிறது. ஆனால் தலைக்குப் போட முடியாது. எறும்பு மொய்த்துவிடும்.


இறைவனடி சேர ஆதார்..
மதி ஆதார் தலைவாசல்..
கல்லார் அறிவில் ஆதார்..
பிறற்குரியாள் தோள்தோய் ஆதார்..
புகழ்பட வாழ ஆதார்..

- சித்ரன் ரகுநாத் 

வாழ்க்கையில கவலையே இல்லாம இருக்கணும்ன்னா...
கல்லறையிலதான் குடியேறணும்.

- கணேஷ் மணி

இணைந்தால் பிரிவு நிச்சயம் என்று தான்
தனிமையில் உலா வருகிறாளா... நிலா.

- அகல்யா அஷ்வின்


சுட்டுரையிலிருந்து...

கூட வருபவர்கள்... குறுக்கே வரமாட்டார்கள்.
குறுக்கே வருபவர்கள்... கூட வரமாட்டார்கள்.

- கவிஞர் மகுடேசுவரன்

9 மணி வரை நான் ஏன் அலுவலகம் வரவில்லையென நான் தூங்கிக் 
கொண்டிருக்கும்போது மெயில் அனுப்பிக் கேட்கிறார் டேமேஜர்.

- மதுரக்காரன்

சாக்கடையில் கல்லெறிந்தால் நம் மேல் படும் என ஒதுங்கிச் செல்வதை
சாக்கடை தனக்கான பெருமையாய் நினைத்துக் கொள்கிறது 

- கோதை 


வலைதளத்திலிருந்து...

அறையில் அமர்ந்து கொண்டு வானம் பற்றி எழுதுகிறீர்கள்... 
பார்க்க வந்த மழைத்துளிகளை அனுமதித்திருக்கலாம் ...
கதவடைத்துக்கொண்டு காகிதங்களைப் புரட்டுகிறீர்கள்.

http://raajaachandrasekar.blogspot.in 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com