ரேடாராலும் கண்டுபிடிக்க முடியாது!

குதிரைப் படை, யானைப் படை, கப்பல் படை என்று பழைய காலத்தில் படைகள் இருந்தன. வில், அம்பு, வாள் போன்ற போர்க்கருவிகளைப் பயன்படுத்தி நேருக்கு நேர் சண்டையிட்டனர்.
ரேடாராலும் கண்டுபிடிக்க முடியாது!

குதிரைப் படை, யானைப் படை, கப்பல் படை என்று பழைய காலத்தில் படைகள் இருந்தன. வில், அம்பு, வாள் போன்ற போர்க்கருவிகளைப் பயன்படுத்தி நேருக்கு நேர் சண்டையிட்டனர். ஆனால் இப்போது தொலைதூரத்தில் இருந்து குண்டு மழை பொழிகின்றனர். அணுகுண்டுகளை தயாரித்து வைத்துக் கொண்டு அவற்றை வீசப் போவதாகப் பயமுறுத்துகின்றனர். 
தொலைதூரத்தில் உள்ள எதிரி படைகளைக் கண்டறிய பல கருவிகள் இப்போது உள்ளன. ரேடார் எனும் தொலைநிலை இயக்க அறி கருவியும் அவற்றில் ஒன்று. இந்தக் கருவியின் மூலம் வெகு தொலைவில் உள்ள பொருள்களை, மனிதர்களைத் தெரிந்து கொள்ள முடியும். ரேடார் நுண் அலைகளைப் பயன்படுத்தி வாகனங்கள், விமானங்கள் ஆகியவற்றின் இருப்பிடம், அவை செல்லும் திசை, வேகம் ஆகியவற்றைக் கண்டுபிடிக்க முடியும். இந்த ரேடார் மூலம் நுண்ணலைகளை ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி அனுப்புவார்கள். அந்த இலக்கின் மீது அவை படும்போது அவற்றிலிருந்து வெளிவரும் சமிக்ஞைகளை வைத்து அந்த இலக்கைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியும். குறிப்பாக போர் விமானங்கள், கப்பல்களை அறிய இது பயன்படுகிறது. 
இந்த ரேடார் கருவியின் கண்களில் மண்ணைத் தூவும்விதமாக ஐஐடி - கான்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒருபுதுவிதமான " மெட்டாமெட்டிரியல்ஸ்' - ஐக் கண்டுபிடித்துள்ளனர். 
இந்த மெட்டாமெட்டிரியல்ஸ் செயற்கையாக உருவாக்கப்படக் கூடியது. பலவிதமான மூலகங்களை ஒன்றிணைத்து நமது தேவைக்கேற்ப தயாரிக்கப்படக் கூடியது. 
ஐஐடி - கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள இன்ஃப்ரா ரெட் மெட்டாமெட்டிரியல்ஸ் மிகவும் எடை குறைவானது; வளைந்து கொடுக்கும் தன்மை உடையது; எந்தப் பொருளின் மீதும் இதை இணைத்துவிடலாம். 
துணிகளில் இந்த மெட்டாமெட்டிரியல்ûஸப் பூசிக் கொள்ளலாம். கண்ணாடிகளில் பூசலாம். வாகனங்களின் மேல் பகுதியில் பூசலாம். 
இந்த மெட்டாமெட்டிரியல்ஸ் பூசப்பட்ட துணிகளால் தைக்கப்பட்ட சீருடைகளை அணிந்து கொண்டு ஒரு படைவீரர் சென்றால், எதிரி நாட்டின் எந்த ரேடார் கருவியிலும் அவர் தென்படமாட்டார். 
இந்த மெட்டாமெட்டிரியல்ஸ் பூசப்பட்ட வாகனங்களையும் எந்த ரேடார் கருவியும் கண்டுபிடிக்க முடியாது. 
மிகச்சிறிய இந்த இன்ஃப்ரா ரெட் மெட்டா மெட்டிரியல்ûஸ ஒரு பொருளின் மீது பூசினால், அந்தப் பொருளில் இருந்து வெளிவரும் கண்ணுக்குத் தெரியாத பல நுண்ணலைகளின் அளவு குறைந்துவிடுகிறது. அல்லது நுண்ணலைகள் தடுக்கப்படுகின்றன. இதனால் அந்தப் பொருளை ரேடார் கருவியால் கண்டுபிடிக்க முடியாமல் போய்விடுகிறது. 
இந்த இன்ஃப்ரா ரெட் மெட்டா மெட்டிரியல்ûஸ வாகனங்களைப் போர்த்தும் துணிகளில் இணைத்தால், அந்த வாகனத்தை ரேடார் கருவியால் கண்டுபிடிக்க முடியாது. 
"2010 ஆண்டிலிருந்து இந்த கண்டுபிடிப்பு தொடர்பான பணிகளில் நாங்கள் ஈடுபட்டிருந்தாலும், இப்போதுதான் இந்த மெட்டாமெட்டிரியல்ûஸ பெரும் அளவில் உற்பத்தி செய்யும் திறனை நாம் பெற்றிருக்கிறோம். இதன் மூலம் மிகப் பெரிய பரப்பளவிலும் இந்த மெட்டாமெட்டிரியல்ûஸப் பயன்படுத்த முடியும்'' என்கிறார் ஐஐடி - கான்பூரில் இயற்பியல்துறைப் பேராசிரியராகப் பணிபுரியும் எஸ்.அனந்தராமகிருஷ்ணன்.
இந்த மெட்டாமெட்டிரியல்ûஸ ஹெலிகாப்டர், விமானங்கள் ஆகியவற்றிலும் பயன்படுத்த முடியும். பிற நாட்டு ரேடார்களால் அவற்றைக் கண்டுபிடிக்க முடியாது என்பதே அதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும். 
மத்திய அரசின் "பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் (ஈதஈஞ) ஆதரவுடன் இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ந.ஜீவா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com