முக நூலிலிருந்து....
சருகுகளே இல்லையென்றால்...
புதிய தளிர்களுக்கு, யார்தான்பூபாளம் பாடுவது?
- கவி வளநாடன்
பக்தி, சிரத்தை, நம்பிக்கை இம் மூன்றை விட...
புரிதலே முக்கியத்துவம் பெறுகிறது.
- அம்பாள் தாய்
ஒவ்வொரு செய்கைக்குப் பின்னாலும்
நீங்கள் எதையோ விட்டுச் செல்கிறீர்கள்...
நல்லதாகவோ, கெட்டதாகவோ.
- ஐயப்ப மாதவன்
அவன் எறிந்த கல்
நீரில் பட்டுத் தெறிக்க,
நீர் வளையங்களால்
சூழப்பட்டிருக்கிறது குளம்.
மீண்டும் மீண்டும் கற்கள்
மீண்டும் மீண்டும் நீர் வளையங்கள்.
கற்களால் சூழப்பட்ட உலகம்
நீர் வளையங்களால் ஆனது.
- வதிலை பிரபா
சுட்டுரையிலிருந்து...
நரகம் என்பது மரணத்திற்கு பிறகு மட்டுமே வருவதல்ல.
வாழும்போதே... நேசிப்புக்குரியோரை வதைக்கும் துன்பத்தில் உதவ முடியாமல் போகும் தருணமும்தான்.
- ஈரோடு கதிர்
செருப்புக்குள் புகுந்த சிறு கல்..
பல்லிடுக்கில் மாட்டிய உணவுத்துகள்...
தொண்டைக்குள் சிக்கிய மீன்முள்...
எல்லாமே உறுத்தல்தான், நீங்கும்வரை.
- புகழ்
தன்னைப் புலி என்று நினைக்கும் எல்லா ஆண்களும்...
தன் மனைவியிடம் "மியாவ்" என்றே கர்ஜிக்கிறார்கள்!
- சண்டியன்
மருத்துவமனைக்கு போனால் பாதி பேர் free wifi கிடைக்குதான்னு தேடி பார்த்த பிறகுதான் பார்க்க வந்த டாக்டரைத் தேடிப் போகிறார்கள்...!
- மெத்த வீட்டான்
வலைதளத்திலிருந்து...
பிள்ளைப் பிராயத்தில் எப்போதாவது குளிப்பேன். அடித்தால் பல் துலக்குவேன். அறிவு வளர்ந்த பிறகு தவறாது குளித்தேன். தினசரி பல்துலக்கினேன். "ஆலும் வேலும் பல்லுக்குறுதி' என்றான் ஒருவன். நான் அதை நம்பினேன். இன்னொருவன் வந்தான்...
"பல்லிடுக்கு, நுண்கிருமி' என்றெல்லாம் பயங்கரக் கதைகள் சொன்னான்.
உடனடியாக நெளிந்து வளைந்த புருசுக்கு மாறினேன். பிறகொருவன் சொன்னான்...
"ஒரு துலக்கால் பன்னிரண்டு மணி நேரத்தைத் தான் பாதுகாக்க இயலும்...'
பல் போனால் சொல் போச்சு...
நான் அன்றிரவே இதுவரை தவற விட்ட எல்லா இரவுக்குமாய் சேர்த்துத் துலக்கினேன்.
என்னிடம் உள்ள ஒரே நல்லொழுக்கம் புகையாமை மட்டுந்தான்.
நேற்றொருவன் எச்சரிக்கிறான்...
"" நீ ஒரு முறை பல் துலக்குவது ஆறு சிகரெட் புகைப்பதற்குச் சமம்...''
பல்முளைத்த காலந்தொட்டு நான் துலக்கோதுலக்கென்று துலக்கி வரும்
பற்பசையில் நிக்கோடின் கலந்துள்ளதாம். நாளையிலிருந்து நாள் ஒரு தகவலாக அழித்துக் கொள்ள இருக்கிறேன்.
http://isaikarukkal.blogspot.in